கிளிநொச்சியில் அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய கோரவிபத்தில் ஒருவர் பலி.

இன்று (10) யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்தில் கிளிநொச்சி கணசேபுரத்தை சேர்ந்த 75 வயதுடைய குமரேஸ்வரன் யோகலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.