ரணிலுக்கு நன்றி. தோல்வியடைந்த பிறகு,அவர் தனது சொந்த வீட்டிற்குச் சென்றார்-ஜனாதிபதி அனுர!

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமே தற்போது அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தவில்லை என்றும், பதவியில் இருந்து விலகிய பிறகு அவர் தனது சொந்த வீட்டிற்கு குடிபெயர்ந்ததாகவும், அதற்காக அவர் நன்றியுள்ளவராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிரச தொலைக்காட்சி பேட்டியில் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஹேமா பிரேமதாசவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும் தாங்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மட்டுமே தற்போது உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.