கொழும்பு துறைமுகத்தில் துயர சம்பவம் – கப்பற்துறை தொழிலாளி தடாகத்தில் விழுந்து உயிரிழப்பு!

கொழும்பு துறைமுக வளாகத்திலுள்ள கப்பற்துறையில் துணை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஒரு தொழிலாளி, கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (31) காலை நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் விவரங்கள்:
37 வயதான பரகஹவிட்ட பகுதியைச் சேர்ந்த தொழிலாளி குறித்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, கைகளைக் கழுவுவதற்காக தடாகத்திற்குச் சென்றுள்ளார்.

திரும்பி வரும் வழியில், தடாகத்தில் தவறி விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுழியோடிகள் மூலம் உடனடியாக மீட்கப்பட்ட அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மீண்டும் ஒருமுறை தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.