மகிந்தவுக்கு வீட்டைக் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தில் அநுர உடனிருந்தார் – ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில், நல்லாட்சி காலத்தில் விஜேராமயாவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்க ஒப்புதல் அளித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் தானும் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை கொழும்பில் உள்ள அமாரி ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர, வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, உதய கம்மன்பில, மனோ கணேசன், பி. திகாம்பரம், சுசில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால, காஞ்சன விஜேசேகர, சுகீஸ்வர பண்டார மற்றும் பிரேமநாத் தொலவத்த உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அப்போது, ​​முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்புகளை வழங்க அரசாங்கம் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது என்று ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

தற்போதைய ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பூர்வ இல்லம் வழங்க அன்று முடிவு செய்யப்பட்டமை, சட்டப்பூர்வமாக நடைபெற்றது என்றார் ரணில் விக்கிரமசிங்க .

Leave A Reply

Your email address will not be published.