ரணில் வலையில் சிக்க மாட்டோம் – பெப். 08 SJB போராட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் , முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு வலியுறுத்தி பெப்ரவரி 08 ஆம் தேதி அக்கட்சியின் தலைமையக அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கட்சியின் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடும் வகையில், இந்த போராட்டம் சுஜீவ சேனாசிங்க மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சரித் அபேசிங்கவால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

“UNP- SJB. பேச்சுக்களுக்குப் பின் பின்வரிசையில் எதிர்ப்பு இல்லை”

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பது தொடர்பில் நடைபெறும் பேச்சுக்களுக்கு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக பரவும் செய்திகள் பொய்யானவை என்று தெரிவித்தார்.

அந்த பேச்சுக்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

இரு கட்சிகளிலும் ஒரு சிலரே தங்களது குறுகிய நலன்களுக்காக இரு கட்சிகளும் ஒன்றிணைவதை விரும்பவில்லை என்றும், அந்த சிலரின் எதிர்ப்பை மீறி நாட்டு நலனுக்காக இரு கட்சிகளும் ஒன்றிணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.