சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க பதவியில் இருந்து விலகும் வரை அல்லது நீக்கப்படும் வரை தொடர் போராட்டங்களை ஆரம்பிக்க ஏற்பாடுகள்…
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250207-WA0014.jpg)
நேற்று கொழும்பில் சட்டமா அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரி போராட்டம் ஒன்று நடைபெற்றது.
லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்கள் மூவரை விடுவிக்க அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு பரிந்துரைத்திருப்பதே இதற்குக் காரணம்.
லசந்த விக்ரமதுங்கவின் மகள்கூட பிரதமருக்கு கடிதம் எழுதி, சட்டமா அதிபருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து அவரைப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரியுள்ளார்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுர திசாநாயக்க இது தொடர்பாக சட்டமா அதிபரை அழைத்து கருத்து கேட்டறிந்துள்ளார்.