குளவி கொட்டியதில் 9 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதி .
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீதியில் பலர் பயணித்துக் கொண்டிருந்த போதே குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது. இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.