டுபாயில் மரணமானதாக கூறப்பட்ட டான் பிரியசாத் கட்டுநாயக்கவில் கைது.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0083-1.jpg)
2025 ஜனவரி 29 ஆம் திகதி டுபாயில் நடந்த வாகன விபத்தில் டான் பிரியசாத் உயிரிழந்ததாக செய்தி பரவியது.
சமூக ஊடகங்களில் அவரது மரணம் குறித்து பல பதிவுகள் வெளியிடப்பட்டன.
இருப்பினும், அவரது மரணம் குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.
டான் பிரியசாத்துக்கு முன்பு சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகள் …
2022 மே 09 அன்று கொழும்பு காலி முகத்துவாரத்தில் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அவர் 6வது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும், 2017 ஆம் ஆண்டில் கல்கிஸ்ஸ பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு அருகில் வன்முறையில் ஈடுபட்டதற்காக டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்.
இது தவிர, நாட்டில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், 2024 செப்டம்பரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல வந்த டான் பிரியசாத்தை குடிவரவு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அவருக்கு எதிராக நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்திருந்ததால் இவ்வாறு செய்யப்பட்டது.
அநேக குற்றச்சாட்டுகள் இருந்த சிங்கள தேசிய இயக்கத்தின் அழைப்பாளராக தோன்றிய டான் பிரியசாத் இன்று (11.02) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.