பிரதமர் ஹரினி அமரசூரிய, யாழ் வருகை.

இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

அத்துடன், கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் அவருக்கு பாடசாலை அதிபரால் நினைவுப் பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.