அதானி வெளியேறுவது என்பது இந்தியா இலங்கையை கைவிடுவது போன்றது – ரணில்

அதானி நிறுவனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டது, இந்தியா இலங்கையை கைவிட்டு விட்டதற்கான ஒரு சமிக்ஞையாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மல் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அதானி நிறுவனம் காற்றாலை மின் நிலைய திட்டத்தை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறியதால், அரசாங்கம் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகிறது.