மல்வானே மாளிகையை கட்டுவதற்கான சுப நேரத்தை பார்க்கச் சொன்னது பசில் ராஜபக்ஷவின் மனைவிதான் – ஜோதிடர் சுமனதாச

சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று அப்போது கூறப்பட்ட மல்வானே மாளிகை எனப்படும் வீட்டை கட்டுவதற்காக தனக்கு நல்ல நேரம் பார்த்து கொடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரச ஜோதிடராக பணியாற்றிய சுமனதாச அபேகுணவர்தன கூறுகிறார்.

இணைய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் தான் அந்த நல்ல நேரத்தை பார்த்து கொடுத்தேன்.

இருப்பினும், தற்போது அந்த வீட்டின் சரியான உரிமையாளர் இல்லாததால், அந்த சொத்தை அரசாங்கம் கையகப்படுத்துவது குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இணைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமனதாச அபேகுணவர்தன கூறுகையில், இவ்வளவு பெரிய வீட்டை கட்டுவது சாதாரண மனிதனால் முடியாத ஒன்று.

மேலும், அதற்கு உரிமையாளர் இல்லை என்று கூறுவது ஒரு குற்றம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.