சம்பள சீர்திருத்தத்தால் சம்பளம் குறைந்துள்ளது.. மருத்துவர்கள் கொந்தளிப்பு.

அரச ஊழியர்களுக்கான இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சம்பள சீர்திருத்தங்கள் தொடர்பாக அரச சேவையில் உள்ள சில உயர்மட்ட தொழில்முறை குழுக்களிடையே அவர்களின் சமூக வலைப்பின்னல் குழுக்களில் சர்ச்சைக்குரிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

புதிய சம்பள சீர்திருத்தங்களுடன் அவர்களின் கடைசி மாத ஊதியம் குறைய வாய்ப்புள்ளது என்பதே இதற்குக் காரணம்.

மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தாதியர்கள் இந்த சூழ்நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய சம்பள சீர்திருத்தத்தின் காரணமாக தங்களுக்கு மாத இறுதியில் கிடைக்கும் தொகை குறைந்துள்ளதாகவும் அவர்களிடையே தற்போது கடுமையான விவாதம் நடந்து வருகிறது.

இது தொடர்பாக விரைவில் அரசு அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்களின் முக்கிய தொழிற்சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.