வாட்ஸ்அப் மூலம் தனது நிர்வாணத்தை பகிர்ந்த ஒருவர் கைது.

ஒரு நபர் தனது வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தி தனது பிறப்புறுப்புகளைக் காட்டி ஆபாசப் புகைப்படங்கள், பாலியல் காட்சிகள் மற்றும் ஆடியோ பதிவுகளை அனுப்பி முறையற்ற பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல் செய்ததாக பல பெண்கள் குற்றப் புலனாய்வுத் துறையின் வடமத்திய மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்ததையடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டன.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பெண்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை பழுதுபார்க்க ஒரு சேவை நிலையத்திற்கு சென்றபோது, அங்கு உரிமையாளர் பெண்களின் தொலைபேசி எண்களைப் பெற்று பின்னர் தனது வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தி பிறப்புறுப்புகளைக் காட்டி ஆபாசப் புகைப்படங்கள், பாலியல் காட்சிகள் மற்றும் ஆடியோ பதிவுகளை அனுப்பி பெண்களுக்கு முறையற்ற பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்த பின்னர், சந்தேக நபர் 2025.02.17 அன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 49 வயதான பண்டுலகம, அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்.
சந்தேக நபர் 2025.02.18 அன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 2025.02.25 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.