அர்ச்சுனாவின் நடவடிக்கைகள் குறித்த குழு அறிக்கை பாராளுமன்றத்தில் .

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகள் குறித்து தனக்கு கிடைத்த புகார்களை கருத்தில் கொண்டு, அது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தான் நியமித்த சிறப்பு குழுவின் அறிக்கை இவ்வாறு தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் கூறினார்.

துணை குழுத் தலைவர் ஹேமாலி வீரசேகர தலைமையில், அமைச்சர் விஜயத ஹேரத் மற்றும் ரஞ்சித் மதும பண்டார ஆகியோர் உறுப்பினர்களாக இந்த குழு அமைக்கப்பட்டது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

மேலும், இந்த அறிக்கை நெறிமுறைகள் மற்றும் சலுகைகள் குழுவிற்கு அனுப்பப்படும் என்றும் சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் சபாநாயகர் அறிக்கை வெளியிட்டார்.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அவ்வப்போது தன்னிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை அனுப்பியுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.