கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை : கொலையாளி கைது

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது.
Update : துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் உடனடியாக விரைந்து சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரையும், T-56 துப்பாக்கியுடன் கைது செய்ததாக கூறப்படுகிறது.