துப்பாக்கிகளுடன் இளம்பெண் கைது.

2 ரிவால்வர் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 2 கத்திகளுடன் ஒரு பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த சந்தேக நபர் நேற்று (22) இரவு ஹபரதுவா பொலிஸ் பிரிவில் உள்ள வெல்லெகெவத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லெகெவத்த பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண் ஆவார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் துப்பாக்கி 1, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் துப்பாக்கி 1, 2 கைத்துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 2 கத்திகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.