இலங்கை கடற்பரப்பிற்குள் 32 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக , கடற்படை ஊடகப் பேச்சாளர் லெஃப்டினன் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடமத்திய மாகாண கடற்படை தலைமை, கூட்டு ரோந்து நடவடிக்கையின் போது, இவர்கள் இலங்கை கடற்பரப்புகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
இருப்பினும் தாங்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுதே கைது செய்யப்பட்டதாக இந்திய மீனவர்கள் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.