இம்முறை சம்பள உயர்வு மூலம் அதிபர்கள், ஆசிரியர்கள் முதல் 10 சம்பளத் தளங்களுக்குள் வந்துள்ளனர்..

இந்த பட்ஜெட் மூலம் முன்மொழியப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாட்டின் முதல் பத்து சம்பள பிரிவுகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பட்ஜெட் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார்.

“ஆசிரியர்களின் சம்பளம் முதல் 10 பிரிவுகளுக்குள் கொண்டு வரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டாலும், அது நிறைவேற்றப்படவில்லை என்று சில உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. அதிபர்களின் சம்பளம் ரூ. 30,105 மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ரூ. 25,360 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த சம்பள பிரிவுகளில் 07வது இடத்தை அதிபர்களும், 08வது இடத்தை ஆசிரியர்களும் பெற்றுள்ளனர்.

மேலும், ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாடு முதல் பல்கலைக்கழக கல்வி வரை கல்வியின் வளர்ச்சிக்கு கூடுதலாக 6,019 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.”

Leave A Reply

Your email address will not be published.