Online டொலர் மூலம் சம்பாதிப்பவர்களது 15 சதவீத வரியை குறைக்க முடியாது… அரசு நிலைப்பாடு!

ஏப்ரல் மாதம் முதல் இணைய சேவைத் துறைக்கு விதிக்கப்படவுள்ள 15 சதவீத வரியை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என ஊடகத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில், இணையத்தின் மூலம் சமூக ஊடகங்களை கையாண்டு கண்ணுக்கு தெரியாத வகையில் தேசிய பொருளாதாரத்திற்கு அதிக டொலர்களை சேர்க்கும் ஆக்கப்பூர்வமான இளைஞர்களைக் கொண்ட இந்த துறைக்கு வரி விதிப்பதற்கு பதிலாக ஊக்குவிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ அந்த வரி விதிப்பை கைவிட முடியாது என்றார்.

“எனது அறிவின்படி, இதைவிட அதிக வரி விதிக்க முன்மொழியப்பட்டது. ஆனால் இந்த நேரத்தில் நாங்கள் அதை செய்ய வேண்டும். இல்லையெனில், நாங்கள் மிகவும் கடுமையான வரிகளுக்கு செல்ல வேண்டும்.

அரசு வருவாயை அதிகரிப்பதற்காக மக்களுக்கு அதிக சுமையை சுமத்தாமல் நாங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட வரிகளை வசூலிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ”

“ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள சுமையில் பெரும்பாலானவற்றை குறைக்கப் போகிறோம். இப்போது என்னால் கொடுக்கக்கூடிய பதில் இதுதான். நிதி அமைச்சகத்தின் சார்பில் மேலும் ஏதேனும் நிவாரணம் வழங்க முடியுமா என்று நான் பார்ப்பேன்.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.