இலங்கையின் பாதாள உலகம்: ஒரு வரலாற்று பார்வை

இலங்கையின் பாதாள உலகம் இன்று நாட்டில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதன் தோற்றம், வளர்ச்சி, மற்றும் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யலாம்.
பாதாள உலகத்தின் தோற்றம்
பழங்காலத்திலிருந்தே, சமூகத்தில் சண்டியர்கள் (gangsters) என அழைக்கப்பட்ட கடுமையான நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டனர். ஆரம்பகால பாதாள குழுவினருள் நோயல் அமரசிங்க, நிஹால் அமரசிங்க, தம்மிக சிந்தக பெரேரா, சொத்தி உபாலி, கடுவெல வசந்த, மஹவத்தை இந்திரே, நாவல நிஹால் போன்ற பயங்கர தன்மைக் கொண்ட நபர்கள் அடங்குவர்.
பாதாள உலகத்தின் கொடியவர்கள் முன்பு இருந்தார்கள். நோயல் அமரசிங்க, நிஹால் அமரசிங்க, தம்மிக சிந்தக பெரேரா, சொத்தி உபாலி, கடுவெல வசந்த, மஹவத்தை இந்திரே, நாவல நிஹால் போன்றவர்கள் கொடூரமானவர்கள். அவர்கள் வெளியே சென்று தாக்கினால், வாயை திறந்து ஆசிட் ஊற்றுவார்கள் அல்லது கண் முன்னாலேயே கம்பியை வாயில் விட்டு பின்னால் வரும் வரை உள்ளே தள்ளுவார்கள். அந்த கும்பல் மிகவும் கொடூரமானது. கொல்ல சென்றாலும், மிகவும் தைரியமாக துரத்தி துரத்தி சுற்றி வளைத்து தாக்குவார்கள். தங்கள் பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே அனைத்தையும் செய்தார்கள்.
88/89 ஜே.வி.பி இரண்டாவது கிளர்ச்சியுடன் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் தங்கள் பாதுகாப்புக்காக பாதாள உலகத்தினரை நாய்களைப் போல் வளர்த்து, தங்கள் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டபோது, இது ஒரு விஷம் போல பரவும் என்று அவர்கள் நினைக்கவில்லை.
நாய்கள் இறந்ததும் வேலை முடிந்து விடும் என்று அவர்கள் நினைத்தார்கள். நாய் இறந்ததும் ஈக்கள் இறந்துவிடும் என்று காவல்துறையும் நினைத்தது. ஆனால் தெரு நாய்களை விட்டுவிட்டால், அவற்றை மீண்டும் நல்ல நாய்களாக மாற்றுவது கடினம். அவர்கள் அதே கும்பலின் உறுப்பினர்களாக தலைமுறை தலைமுறையாக வளர்வார்கள். தலைமுறை தலைமுறையாக செல்கிறார்கள். ரத்தத்திற்கு ரத்தம் எடுக்கிறார்கள்.
ஃபாஜி, ஆனமாளு இமிட்டியாஸ் போன்றவர்கள் ஹெராயினுடன் முஸ்லிம் பாதாள உலகத்தை உருவாக்கியபோது, கிம்புலா எல குணா, தெல் பாலா போன்றவர்கள் எல்.டி.டி.ஈயுடன் இணைந்து தமிழ் பாதாள உலகத்தை உருவாக்கினார்கள்.
ஆனால் இருவரின் ஆயுட்காலமும் முடிந்து போனாலும், இறுதியில் இந்த நாட்டில் அரசியல் பாதாள உலகம், முஸ்லிம், தமிழ், அனைத்து பாதாள உலகங்களையும் தூள் தூளாக்கி “போதைப்பொருள் பாதாள உலகம்” என உருவானது.
இதற்கு காரணம் தென் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுத்து வழங்கப்பட்ட போதைப்பொருட்கள்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து எந்த நாய்க்கும் , எது வேணமானவை கிடைக்கும் இடமாக மாறியதுதான். பணம் கொடுத்தால் போதைப்பொருள் கப்பல்களைக் கூட கொடுக்கும் இடமாக மாறியது.
படோவிட்ட வெலே சுதா மற்றும் முகமது சித்திக் இருவரும் இணைந்து போதைப்பொருள் விற்றார்கள். மகந்துரே மதுஷ் மற்றும் கஞ்சிபானி இப்றாகிம் இணைந்து போதைப்பொருள் விற்றார்கள். அன்னாசி மொரில் பழைய ஆள். ஆல்டோ தர்மே மற்றும் அஞ்சு புதியவர்கள்.
கணேமுல்ல சஞ்சீவ், பத்மே மற்றும் பட்டுவத்தை சாமர போன்றவர்களும் இந்த கதையில் புதியவர்கள். அவர்கள் அனைவருக்கும் இதன் உரிமையை வேண்டும். ஒருவரை ஒருவர் நம்பாத நிலை. அந்த நம்பிக்கை உடையும் இடத்தில் மரணம். அந்த அவநம்பிக்கை அவர்களால் மட்டுமல்ல, மற்றவர்களாலும் ஏற்படுகிறது. இதில் மணல் மாபியாவும் கலந்துவிடுகிறது.
பாதுகாப்பு துறையைச் சேர்ந்த சிலர், சில சட்ட வல்லுநர்கள், சில அரசியல்வாதிகள், சில ஊடகவியலாளர்கள் என ஒரு சில சிறு குழுக்கள் இந்த கதைகளுக்கு பின்னால் இருக்கிறார்கள். மாட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள்தான் குற்றவியல் அரசை உருவாக்குகிறார்கள். குற்றவியல் அரசில் உண்மையை மறைக்க கொலை செய்கிறார்கள், சாட்சிகளை மறைக்க கொலை செய்கிறார்கள், மற்றவர்களுக்காக கொலை செய்கிறார்கள், பணத்திற்காக கொலை செய்கிறார்கள். அவை அரசியல் ரீதியாக மட்டுமல்ல. அவை அவிழ்க்க முடியாத முடிச்சுகள். அவிழ்க்க முடியாத முடிச்சுகளும் உள்ளன.
இப்போது முன்பு இருந்ததை விட கொடூரமானது. அடித்தால், உலகில் இல்லாமல் போகும் அளவுக்கு அடிக்கிறார்கள். நமக்கும் அது அப்படித்தான். ஆனால் பேசியது ஒரு சிறு வாய் என்றாலும், அடித்தது அவனோ இவனோ என்றாலும், திட்டமிட்டது அவனோ இவனோ என்றாலும், எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு ஓரக்கண்ணால் சிரிக்கும் தீவிரமானவர்களும் இருக்கிறார்கள். அதுதான் குற்றவியல் அரசில் “மரணத்தை அடையாளம் காண முடியாத சிக்கல்”.
ஆக்கம் : கயான் கால்லகே
தமிழில் : ஜீவன்.