சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு சமூக நலத்திட்டத்தையும், ஓய்வூதிய முறையையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை துணை அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே நேற்று (05) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தற்போது 100 சுற்றுலா தலங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தலா 10 மில்லியன் ரூபாய் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓய்வு மையங்களை கட்ட அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.