வெளிநாட்டு பெண்ணிடம் லஞ்சம் கேட்ட மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியிடம் லஞ்சம் கேட்டதாக ஒரு போலீஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் இருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் கேட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.