தாமரை மொட்டை கைவிட்ட பசில் ராஜபக்‌ஷ: அமெரிக்காவில் தஞ்சம்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முழுமையாக நிறுத்திவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அமைப்பு நடவடிக்கைகளை கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தற்போது மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் அமைப்பு நடவடிக்கைகளில் பசில் ராஜபக்‌ஷ ஈடுபட மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

பசில் ராஜபக்‌ஷ தற்போது அமெரிக்கா சென்று அங்கு தங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.