ஆண்மை வலிமை, கொண்டவர்களாக மாறுவதற்கு ….

நீங்கள் 100 காளைகளின் வலிமை, கொண்டவர்களாக மாறுவீர்கள் இதை இப்படி சாப்பிட்டால்
நாம் சமயங்களில், வாகனங்களில் கிராமங்களை ஒட்டிய நெடுஞ்சாலைகளை கடக்க நேர்கையில், சாலையோரங்களில் அல்லது வயலோரங்களில், நம் கவனத்தை ஈர்க்கும் வெண்ணிற மலர்களின் செழுமையில் பரவலாக காணப்படும் ஒரு செடி வகைதான், ஊமத்தை. சில ஊமத்தையின் மலர்கள் மஞ்சள் வண்ணத்தில் அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்திலும் காணப்படுகிறது.
முள்ளை முள்ளால் எடுப்பது போல, விஷத்தை, விஷத்தால் முறிக்கும் தன்மையுள்ள ஒரு விஷச்செடியான ஊமத்தைச்செடி, வெற்றிலை போன்ற சற்றே பெரிய இலைகளுடன், இதன் காய்களின் வெளிப்பரப்பில், முட்கள் அதிகம்கொண்டு காணப்படும்.
ஊமத்தை என்பதற்கு உன்மத்தம், என வேறு பெயரும் உண்டு, உன்மத்தம் என்றால் ஆவேசமான மனநிலை, பைத்தியம் எனப் பொருள்படும். உன்மத்தம் கொண்ட மனிதர்களுக்கு நிவாரணம் தரவும், உடல் வேதனைகளில் வாடும் மனிதர்களுக்கு நல்லுதவி செய்யவும் ஊமத்தை செடி, ஒரு அற்புத கொடை என்பதில் ஐயமில்லை. ஆயினும், ஊமத்தை செடியின் விஷத்தன்மை காரணமாக, அதை கவனமுடன் கையாள வேண்டும்.

மற்ற பயன் தரும் மூலிகைகள் போலவே, ஊமத்தையின் வேர், இலை மலர்கள், விதை உள்ளிட்ட முழு செடியும் மனிதர்க்கு நன்மைகள் தரும் வகையில், தனிப்பட்ட சிறப்புகள் உடையவை. ஊமத்தையின் பொதுவான பயன்கள், மனிதர்களின் உடல் வியாதிகளை சரி செய்யக் கூடியதாகவும், உடல் விஷத்தை போக்குவதாகவும், மனிதர்களின் சித்த பிரமைக் கோளாறுகளை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளது.

நவீன மேலை மருத்துவ முறைகளில், பல்வேறு கண் வியாதிகளை சரிசெய்யும் கண் மருந்துகளின் மூலப் பொருளாக பயனாகிறது. மேலை மருத்துவ அறுவை சிகிச்சை முறைகளில், தாய்மார்களின் பிரசவ காலங்களில் அவர்களுக்கு அளிக்கப்படும் மயக்க மருந்துகளில், மூலப் பொருளாகவும் பயன் தருகிறது.
மனிதரின் பல்வேறு பட்ட வியாதிகளை தணிப்பதில், ஊமத்தை இலைகளுக்கு பெரும் பங்கு உண்டு, சொல்லப் போனால், உடலின் பல்வேறு வகை வியாதிகளுக்கும் ஒரே தீர்வாக ஊமத்தை இலை அமைகிறது என்பதே உண்மை என்பதை, பின்வரும் குறிப்புகளின் மூலம் அறிய முடியும்.