நலின்த…அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் இப்படி எவ்வளவு காலம் ஓட்டுவது?

அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் அரசு மருத்துவமனை அமைப்பை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அவசர அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு வழங்க வேண்டிய அத்தியாவசிய மருந்துகள் மட்டுமல்லாமல், குறைந்த விலை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளும் மருத்துவமனைகளில் இல்லை என்று அறிக்கை கூறுகிறது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளில் பெரும்பாலோர் தேவையான மருந்துகளை வெளியில் இருந்து கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், சில மருந்துகள் தனியார் மருந்தகங்களில் கூட இல்லை என நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், தனியார் மருந்தகங்களில் இல்லாவிட்டாலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் , வெளிப்புற மருந்தகங்களில் இல்லாத அனைத்து வகையான மருந்துகளும் உள்ளன, அவற்றின் விலைகள் அதிகமாக உள்ளன என நோயாளிகள் கூறுவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ஒருவர் சிங்கள சகோதர ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியவை சரியான நேரத்தில் மருந்துகளை ஆர்டர் செய்யாததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.