ஷிராந்தி ராஜபக்ஷவிடம் CID விசாரணை.. இம்புல்கொட விகாரை காணி ஷிராந்தி பெயரில்..

இரண்டு நில பரிவர்த்தனைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

களனி இம்புல்கொட பகுதியில் உள்ள விகாரைக்கு வலுக்கட்டாயமாக நுழைந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், சம்பந்தப்பட்ட நிலம் விகாரைக்கு சொந்தமானது அல்ல என்றார்.

பல நிலங்களின் ஆவணங்களை காட்டிய அவர், அவை ஷிராந்தி ராஜபக்ஷ பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அந்த ஆவணங்களில் விகாரை அல்லது துறவியின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.