அஞ்சல், ரயில்வே, சுகாதாரம், பல்கலைக்கழகங்களில் வேலைநிறுத்த அலை!

கூடுதல் நேரப் படிகள், விடுமுறை நாள் கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு வெட்டுக்களுக்கு எதிராக அஞ்சல், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைந்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

இந்தத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சில சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டாலும், அதற்கேற்ப மாதச் சம்பளத்தில் இருந்து உயர்த்தப்பட்ட தொகை வெட்டப்படும் என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இது தொடர்பாக அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், அதில் எந்தப் பலனும் இல்லாததால், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இந்த சம்பள வெட்டுக்கள் செய்யப்படுவதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி, அஞ்சல், ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சில பகுதிகளை தனியார்மயமாக்குவதே சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி இலக்கு என்று தொழிற்சங்கங்கள் சார்பில் கருத்து தெரிவித்த சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் கூறினார்.

அந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் சம்பள வெட்டுக்கள் செய்யப்படுவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.