ஜனவரி 1 முதல் இதுவரை 27 துப்பாக்கிச் சூடுகள்; 22 பேர் பலி!

2025 ஜனவரி 1 முதல் இன்று வரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனவரி மாத துப்பாக்கிச் சூடுகள்
ஜனவரி 04 – வெலிகம பொலிஸ் பிரிவின் கப்பரதொட்ட வல்லிவெல பகுதியில் பாதசாரிகள் 05 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவத்தில் 26 வயது நபர் உயிரிழந்தார்.
ஜனவரி 07 – கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
36 மற்றும் 20 வயதுடைய அப்பகுதியை சேர்ந்த இருவரே உயிரிழந்தனர்.
ஜனவரி 09 – அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லொக்கு பெட்டி என்ற குற்றக் கும்பல் உறுப்பினரின் உறவினர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக பொலிஸார் பின்னர் தெரிவித்தனர்.
ஜனவரி 13 – தேவிநுவர, தல்பாவில் பகுதியில் மீன் வியாபாரி ஒருவரை குறிவைத்து அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கருவாடு வாங்க வேண்டும் என்று கூறி வீட்டின் கேட்டை திறந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வியாபாரி உயிர் தப்பினார்.
ஜனவரி 15 – தொடங்கொட வில்பாத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனவரி 16 – மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சம்பவத்தில் இருவரும் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த இருவரும் கொல்லப்பட்டனர்.
அன்றைய தினம் கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பகுதியில் உள்ள பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவானது.
மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எனினும், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஜனவரி 19 – கல்கீசை சிரிபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
24 மற்றும் 36 வயதுடைய இருவரே உயிரிழந்தனர்.
கொலை நடந்த 15 நிமிடங்களில் துப்பாக்கிதாரி என கூறப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
15 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்கு இந்த கொலையை செய்ததாகவும் தனக்கு முதலில் 2 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் துப்பாக்கிதாரி பொலிஸாரிடம் தெரிவித்தார்.
ஜனவரி 22 – அம்பலந்தோட்டை கொக்கல பகுதியில் காரில் வந்தவர்கள் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எனினும் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஜனவரி 31 – காலி ஹினிதும, பனங்கல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டி-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், விடுதியின் உரிமையாளர் உட்பட மூவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி மாத துப்பாக்கிச் சூடுகள்
பிப்ரவரி 07 – மினுவங்கொட பகுதியில் உள்ள பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
35 வயது நபர் உயிரிழந்தார்.
பிப்ரவரி 10 – கொட்டாஞ்சேனை பெனடிக் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
43 வயது நபர் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூடு ‘பழனி ஷிரான் குளோரியன்’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் குழுவால் நடத்தப்பட்டது என்று பொலிஸார் பின்னர் கண்டுபிடித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் போதைப்பொருள் கடத்தல்காரரான பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற ‘பூக்குடுக்கண்ணாவின்’ நெருங்கிய கூட்டாளி என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பிப்ரவரி 19 – மித்தெனிய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவருடன், அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
‘கஜ்ஜா’ என்ற நபர் மற்றும் அவரது 6 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
அன்றைய தினம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வழக்கு விசாரணைக்காக பூஸ்ஸ சிறையில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.
வழக்கறிஞர் போல் உடையணிந்து வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார், பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு கணேமுல்ல சஜீவவின் எதிர்க் குழுவான கெஹெல்பத்தர பத்மே குழுவினரால் நடத்தப்பட்டது என்று பொலிஸார் பின்னர் கண்டுபிடித்தனர்.
பிப்ரவரி 21 – ஜா-எல பமுனுகம மோர்கன்வத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் ஒருவரை சுட்டுக் கொன்றார்.
அன்றைய தினம் கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருவரும் அன்றைய தினம் கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் ஆயுதங்களைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
பிப்ரவரி 26 – மினுவங்கொடை, பத்தடுவன சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் , இருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்தவர் கெஹெல்பத்தர பத்மேவின் பள்ளி நண்பர் என்று பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மார்ச் மாத துப்பாக்கிச் சூடுகள்
மார்ச் 08 – கம்பஹா, அகரவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்த இருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு , கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவின் கூட்டாளியான தம்மிக சுமித் என்பவரால் நடத்தப்பட்டது என்று பின்னர் தெரியவந்தது.
மார்ச் 13 – காலி அக்மீமன, தலகல பகுதியில் பூஸ்ஸ சிறையின் முன்னாள் அதிகாரி சிரிதத் தம்மிக அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அன்றைய தினம் வெலிவேரிய அரலியகஸ்தெக சந்திப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
26 வயது உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
காயமடைந்தவர் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என்று பின்னர் தெரியவந்தது.
மார்ச் 14 – அம்பலங்கொட பொலிஸ் பிரிவின் இடம்தோட்ட பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
39 வயது ‘பொடி சுத்தா’ என்ற நபர் கொல்லப்பட்டார்.
மார்ச் 17 – மிதிகம பாதேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
அன்றைய தினம் மாலை கிராண்ட்பாஸ் 4ம் வீதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
22 மற்றும் 28 வயது இளைஞர்கள் காயமடைந்தனர்.
மார்ச் 22 – தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோவிலின் தெற்கு வாஹல்கட முன் சிங்காசன வீதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களை இலக்குவைத்து வேனில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதில் 28 மற்றும் 29 வயது இளைஞர்கள் உயிரிழந்தனர்.