யோஷிதாவும் மனைவியும் கம்பனிவீதி போலீஸ் நிலையத்திற்கு வருகை!

கொழும்பு பார்க் வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க யோஷித ராஜபக்ச இன்று (25) காலை கொம்பனி தெரு காவல் நிலையத்திற்கு வந்ததாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். பார்க் வீதியில் உள்ள இரவு விடுதிக்கு யோஷித ராஜபக்சவுடன் வந்தவர்கள் நுழைந்த போது அங்கு தகராறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இரவு விடுதியின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டார். காயமடைந்த அந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கொம்பனி தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

வாக்குமூலம் அளிப்பதற்காக யோஷித ராஜபக்ச கம்பனிவீதி காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், யோஷித ராஜபக்ச இன்று (25) காவல் நிலையத்திற்கு வந்ததாகவும், அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.