தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் இன்று (25) பிற்பகல் நாடாளுமன்றத்தில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023 டிசம்பர் 31 அன்று வெலிகம பலான பகுதியில் உள்ள W 15 ஹோட்டலுக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோனின் பிணை கோரிக்கையை நிராகரித்த மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

12 பக்க பிணை உத்தரவை வெளியிட்ட மாத்தறை நீதவான் நீதிமன்றம் தேசபந்து தென்னக்கோன் மீது பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது:

“மாத்தறை W15 ஹோட்டலில் துப்பாக்கியால் சுட்டு சேதம் விளைவிக்க, பொலிஸ் திணைக்களத்தின் தலைவராக எட்டு பொலிஸ் அதிகாரிகளை சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினர்களாக பயன்படுத்தி தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தது.”

“அதிகாரப்பூர்வ கடமை இல்லாத தனிப்பட்ட நோக்கத்திற்காக குற்றவியல் பயமுறுத்தலுக்காக பொலிஸ் அதிகாரிகளுடன் சதி செய்தல் மற்றும் பொய் சாட்சியங்களை உருவாக்குதல் உட்பட ஒன்பது குற்றச்சாட்டுகள்.”

Leave A Reply

Your email address will not be published.