15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சிறையில்!

பொலன்னறுவையில் மணல் வியாபாரியிடம் 15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் லஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், வரும் 01 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மாஜிஸ்திரேட் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டார்.

இந்த லஞ்ச வழக்கு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமைச்சரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய இன்று லஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றவாளியை வரும் 01 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைத்த மாஜிஸ்திரேட், அன்றைய தினம் விசாரணை முன்னேற்றத்தை சமர்ப்பிக்குமாறு லஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

மேற்படி லஞ்ச வழக்கு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உட்பட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.