கணவரை காணவில்லை மனைவி பொலிஸில் முறைப்பாடு

மன்னாரில்  குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில்  அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மன்னார் பனங்கட்டுக் கொட்டு மேற்கு பகுதியைச்  சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தரே  கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி  வவுனியா சென்று  இதுவரை வீடு திரும்பாத நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பாக தகவல் எதுவும் தெரிந்தவர்கள் 0743022280,0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.