உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குக்கான திகதிகள் அறிவிப்பு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளைக் குறிக்கும் நாட்கள் ஏப்ரல் 22 முதல் 29 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் 7ஆம் திகதி அந்தந்த மாவட்டச் செயலகங்களில் வெளியிடப்படும்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை ரூ. 74 முதல் ரூ. 160 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனித்தனியாக அந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மன்னார் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை ரூ. 74 ஆகும். லாஹுகல உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய தொகை ரூ. 160 ஆகும்.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய தொகை இந்த விலை வரம்புக்குள் இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.