திருடிய சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய ஆணையம்!

குற்றத்தால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் சட்டம் என்ற புதிய சட்டம் எதிர்வரும் 8-ம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

குற்றத்தால் சம்பாதித்த சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் மற்றும் அவற்றை மீண்டும் அரசுடைமையாக்குதல் ஆகியவை இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்கு கூடுதலாக, குற்றத்தால் உருவாக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதற்கான பல புதிய ஏற்பாடுகளும் இந்தச் சட்டத்தில் அடங்கும்.

குற்றத்தால் உருவாக்கப்பட்ட சொத்துக்களை விசாரிக்கவும், தடை செய்யவும் இந்தச் சட்டம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

மேலும், குற்றத்தால் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிப்பதற்கான புதிய ஆணையத்தை நிறுவுவதும் புதிய சட்டத்தின் நோக்கமாகும்.

லஞ்சம், ஊழல், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நிதி குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளும் இனி புதிய சட்டத்தின்படி மேற்கொள்ளப்படும்.

Leave A Reply

Your email address will not be published.