வயலில் பயிரிடும் பிற பயிர்களுக்கும் உர மானியம் வழங்கப்படும்! – ஜனாதிபதி

நெல் விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், இந்த ஆண்டு பருவத்தில் வயலில் பயிரிடும் பிற பயிர்களுக்கும் உர மானியம் வழங்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

“நாங்கள் இப்போது மூன்று வாரங்களுக்கு முன்பு அமைச்சரவையில் ஒரு முடிவை எடுத்தோம். இதுவரை நெல் விவசாயத்திற்கு மட்டுமே உர மானியம் வழங்கப்பட்டது. ஆனால் வயலில் பயிரிடும் கூடுதல் பயிர்களுக்கும் உர மானியம் வழங்குவோம்.

நாங்கள் பிணை இல்லாமல் கடன் வாங்கக்கூடிய முறையை உருவாக்குவதாக உறுதியளித்தோம். அதை இப்போது உருவாக்கியுள்ளோம். இளம் தொழில்முனைவோர் தங்கள் தொழில் முனைவோர் திட்டத்தை காட்டி, தொழில் அமைச்சகத்துடன் இணைந்து சான்றிதழ் பெற முடியும். புதிய தொழில் தொடங்க கடன் தொகை பெற உங்களுக்கு பிணை தேவையில்லை.”

தேசிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி தேர்தலுக்காக பெலியத்த பகுதியில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.