பிமலின் பேச்சு தவறு : விமானப்படை கவலை.

ஏழு பேர் கொண்ட குழுவின் அறிக்கை வெளியாவதற்கு முன்பே, விமானிகளின் தவறு காரணமாக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியது தவறு என விமானப்படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது விமானிகளின் தவறு காரணமாகவே என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய கருத்துக்கு விமானப்படை அதிகாரிகள் மத்தியில் கடும் கவலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மூத்த அதிகாரி கூறினார்.

விமான விபத்து தொடர்பான விசாரணை குழு விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வரும் நிலையில், அரசியல் கருத்துக்களை வெளியிடுவது பழைய அரசாங்கங்களின் தவறான முடிவுகளை நினைவூட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட K-8 ரக பயிற்சி விமானம் ஒன்று குருநாகல், வாரியபொல, பாதெனிய பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் இலங்கை விமானப்படை கட்டுநாயக்க தளத்தில் உள்ள விமானப்படை எண் 05 தாக்குதல் படைப்பிரிவில் உள்ள விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டது.

விமானத்தில் இருந்த விமானிகள் பாராசூட் மூலம் தரையிறங்கி உயிர் தப்பினர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விமானப்படை தளபதியின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், விமானிகளின் தவறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது என்று அமைச்சரவை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த 24 ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.