ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் ஏப்ரல் 21க்கு முன் வெளிப்படுத்தப்படுவார்கள் – ஜனாதிபதி நம்பிக்கை.

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான சிலரை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன் வெளிப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை தெய்வந்தர பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

“ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் முறையாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி மீண்டும் ஈஸ்டர் தாக்குதலின் நாள் நினைவுகூரப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் துறை பெரும்பாலும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன் இதற்கு காரணமான குறிப்பிடத்தக்க குழுவை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறது.”

Leave A Reply

Your email address will not be published.