23.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான மருந்துகள் பற்றிய தகவல்களைக் காணவில்லை : பிராந்திய மருத்துவ விநியோகப் பிரிவால் நீக்கப்பட்டதா?

காலி பிராந்திய மருத்துவ விநியோகப் பிரிவு, அமைச்சின் விநியோகத் தகவல் மேலாண்மை அமைப்பில் இருந்த 23.6 மில்லியன் ரூபாய்க்கு சமமான நாட் சென்ற மருந்துகள் பற்றிய தகவல்களை முறையான அனுமதி இல்லாமல் நீக்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிராந்திய மருத்துவ விநியோகப் பிரிவுக்கு சரக்கு ஆய்வுக்காக வழங்கப்பட்ட கடவுச்சொற்களைப் பயன்படுத்தி இந்தத் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

23.6 மில்லியன் ரூபாய்க்கு சமமான மருந்துகள் காலாவதியாகிவிட்டதாக குழு அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மருத்துவ விநியோகத் தகவல் மேலாண்மை அமைப்பின் மூலம், காலாவதியான மருந்துகள் ஒரு வருடத்திற்குள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகள் அகற்றப்பட்டு, நிதி விதிமுறைகள் 102 முதல் 109 வரை உள்ளவாறு புத்தகத்திலிருந்து நீக்குவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், காலி பிராந்திய மருத்துவ விநியோகப் பிரிவு அவ்வாறு செயல்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த தகவல்களை நீக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.