தேசிய மக்கள் சக்தியின் அடித்தளம் சரிகிறது, ஜே.வி.பி. மேலோங்கி நிற்கிறது – நிர்மால் ரஞ்சித் தேவசிரி!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தற்போது செயல்படும் விதத்தால் அவர்களின் மக்கள் அடித்தளம் பலவீனமடைந்து வருவதாக பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிரி தெரிவித்துள்ளார்.

தற்போது தேசிய மக்கள் சக்தி பின்னுக்கு தள்ளப்பட்டு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்னுக்கு வந்துள்ளது என்றும், அரசாங்கத்தை இயக்குவது ஜே.வி.பி.தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது இணைய சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் ,
“தற்போது இந்த அரசாங்கத்தின் பார்வை மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பார்வை குறித்த விவாதத்தில் திலீப விதாரன என்பவர் மிக முக்கியமான பங்காற்றியவர். புத்துயிர் என்ற கருத்தை ஒருவிதமாக வடிவமைப்பதில் திலீப் மிக முக்கியமான பங்காற்றியதாக நான் நினைக்கிறேன். மேலும், அவருக்கு அரசாங்கத்துடன் பெரிய பற்றுதல் இருந்தது.

அவர் மிகவும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் இருந்த தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது சாதாரண நிகழ்வாக கருத முடியாது.

அது மட்டுமல்லாமல், பொதுவாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், குறிப்பாக ஜே.வி.பி. உறுப்பினர்கள் மத்தியில் திலீப் மீது மிகுந்த மரியாதை இருந்தது.

இந்த பின்னணியில் அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது ஒரு எச்சரிக்கை மணியாக கருதப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அதன் உயர்மட்டத் தலைவர்கள்தான் அரசியல் ரீதியாக வழிநடத்துகிறார்கள். தேசிய மக்கள் சக்தி என்று ஒரு நிர்வாகக் குழு உள்ளது, அது தற்போது செயலற்ற நிலையில் உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் செயல்படும் விதத்தால் அதன் அடித்தளம் பெரிதும் பலவீனமடைந்து வருகிறது. இது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தான நிலை என்று நான் நினைக்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.