இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்க்குமாறு மோடியிடம் வலியுறுத்துங்கள்!

வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று மாலை தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்க்குமாறு வலியுறுத்தக் கோரி குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
………..

Leave A Reply

Your email address will not be published.