ஆளுநரின் இளநீர் வியாபாரத்தால்தான் தேங்காய் தட்டுப்பாடு…

ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று முதலிகே அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்த குற்றச்சாட்டில் இருந்து தனது நண்பரை காப்பாற்றி அதை குரங்குகள் மீது சுமத்துவதற்காக அரசாங்கம் இந்த குரங்கு கணக்கெடுப்பை நடத்தியதாகவும் வசந்த முதலிகே குற்றம் சாட்டுகிறார்.

கடந்த அரசாங்க காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நண்பர்களுக்கு உபசாரம், அரசியல் செல்வாக்கு, டீல் என்று விமர்சிக்கப்பட்டதாகவும், இன்று அவை என்னவென்று தான் வியப்படைவதாகவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.