மொஹமட் ருஷ்டி இன்று விடுதலை.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட்ட ருஷ்டி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.