இணைய மோசடிக்கு பயன்படுத்திய 7,200 வங்கி கணக்குகள் முடக்கம்

நடப்பாண்டில் காஷ்மீரில் பணமோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 7,200 வங்கிக்கணக்குகளைக் காவல்துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளது.
பணம் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று பணமோசடிக்குப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசைன் கவலை தெரிவித்தார்.
இதுபோன்று மோசடியாளர்கள் பயன்படுத்தும் வங்கிக் கணக்குகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில், 7,200 வங்கிக் கணக்குகள் இணையக் குற்றங்கள், பண மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, அந்தக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டதாக ஜம்மு காவல்துறை தெரிவித்தது.
“இந்தக் கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் பல கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், எவ்வளவு தொகை என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அதைக் கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன,” என்றார் இம்தியாஸ் ஹுசைன்.
நடப்பாண்டில் இதுவரை 7,200 மோசடி வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் அதன் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டும் என்பது தெரியவந்துள்ளது.
“இணையக் குற்றம், பண மோசடி தொடர்பாக 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
“அவர்களில் 19 பேர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர்கள்.