பிறந்து 21 நாட்களேயான பெண் குழந்தை எறும்பு கடித்து பரிதாபச் சாவு! – யாழ்ப்பாணத்தில் துயரம்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து 21 நாள்களேயான பெண் சிசு ஒன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது.

யாழ். ஆலடி, உடுவில், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்குக் கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்தது.

அந்தச் சிசுவுக்கு நான்கு நாள்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனைப் பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக நேற்று சனிக்கிழமை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

உடற்கூற்றுப் பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமித் தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.