மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் பரிதாபப் பலி.

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை, ஆதிகோயிலடியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் சைக்கிளை நிறுத்தி வைத்து வீதியோரமாக நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

இதன்போது வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.

விபத்தில் மேற்படி நபரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 65 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி நேற்று (14) திங்கட்கிழமை உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.