உள்ளூராட்சித் தேர்தல் குறித்து இதுவரை 1,712 முறைப்பாடுகள்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன.

இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி) 1,712 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1,577 முறைப்பாடுகளும், ஏனைய விடங்கள் தொடர்பில் 126 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.