சென்னையை எளிதில் வீழ்த்தியது மும்பை.

ஐபிஎல் தொடரின் 38-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்ச்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு சூர்யகுமார் யாதவ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.