குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் உயிரிழப்பு!

குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

குடிநீரில் கழிவுநீர்?
திருச்சி உறையூரில் வாந்​தி, வயிற்​றுப் போக்கு காரண​மாக பிரி​யங்​கா(4) என்ற சிறுமி மற்​றும் 2 பெண்​கள் என 3 பேர் அடுத்​தடுத்து உயி​ரிழந்​தனர்.

மேலும், 17 பேர் அரசு மருத்​து​வ​மனை​யிலும், 10-க்​கும் மேற்​பட்​டோர் தனி​யார் மருத்​து​வ​மனை​களி​லும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்கு காரணம் குடிநீரில் கழிவுநீர் கலந்ததுதான் எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், குடிநீரில் கழி​வுநீர் கலக்​க​வில்லை.

அப்​பகு​தி​யில் நடை​பெற்ற கோயில் திரு​விழா​வில் வழங்​கப்​பட்ட அன்​ன​தானத்தை சாப்​பிட்​ட​தால் உணவு ஒவ்​வாமை காரண​மாகவே மக்​களுக்கு பாதிப்பு ஏற்​பட்​ட​தாக​வும், 4 வயது சிறுமிக்கு பாரம்​பரிய முறை​யில் வயிற்​றில் தொக்கு நீக்​குதல் செய்​யப்​பட்​ட​தால் உயி​ரிழந்​த​தாக​வும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

3 பேர் பலி
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 9 இடங்​களில் மருத்​துவ முகாம்​கள் நடத்​தப்​பட்​டன. நோய்த் தடுப்பு மாத்​திரைகள் வழங்கப்பட்டுள்ளது. புதை சாக்​கடை அடைப்பை நீக்​கு​வது, குளோரின் பவுடர் தெளிப்​பது போன்ற பணி​யும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக பாதிப்பு ஏற்​பட்ட பகு​தி​யில் 15 நாட்​களாக குடிநீரில் பிரச்​சினை இருப்​ப​தாக மக்​கள் புகார் அளித்​தும், எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத​தால் உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ளன. மக்​களுக்கு அத்​தி​யா​வசி​ய​மான குடிநீரைக் கூட சுகா​தா​ர​மாக அளிக்க முடி​யாத நிலை​யில் அரசு உள்​ளது.

உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தா​ருக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும் என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தெரிவித்துள்ளார். இதேபோல் பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்​.

Leave A Reply

Your email address will not be published.