தொலைபேசியை பறித்த ஆசிரியயை செருப்பால் தாக்கிய மாணவி.

ஆந்திராவில், தொலைபேசியை பயன்படுத்திய மாணவியின் தொலைபேசியை பறிமுதல் செய்த ஆசிரியயை, அந்த மாணவி செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டிணம் அருகே பொறியியல் கல்லூரியில் நடந்த இச்சம்பவத்தில், தொலைபேசியை பறித்த ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்த மாணவி, தொலைபேசியை திருப்பித் தராவிட்டால் அடிப்பேன் என மிரட்டி, பின்னர் செருப்பால் தாக்கியுள்ளார். சக ஆசிரியர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
இந்த செயலுக்கு கல்லூரி நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்து மாணவி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.