கண்டி நகருக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை.

தலதா மாளிகைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கண்டி நகருக்குள் நுழைவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் நான்கு லட்சம் பேர் கண்டி நகரில் திரண்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் பானங்கள் வழங்க முடிந்தாலும், மக்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகளை வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பேரழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே, மறு அறிவிப்பு வரும் வரை கண்டி நகருக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.